இலங்கையில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறை குறித்து அமெரிக்கா விசனம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 12, 2010

இலங்கையில் சுமூகமான தேர்தல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்ததுடன், தேர்தலைச் சுற்றி அதிகரித்துவரும் வன்முறைகளை பற்றியும் அமெரிக்கா விசனம் தெரிவித்துள்ளது.


இன்று தங்காலையில் நடந்த கொலை குறித்து நீதியான விசாரணை நடத்த உத்தரவிடுவதுடன் மக்கள் தமக்கு விரும்பியவரை ஆதரிக்கும் மக்களாட்சிப் பண்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.


பல தசாப்தங்களின் பின்னர் முழு இலங்கைக்குமாக நடக்கும் இந்த தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் வன்முறைகள் அற்றதாகவும் நடைபெற தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

தொடர்பான செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]