சோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்
வெள்ளி, டிசம்பர் 4, 2009
- 15 மே 2012: சோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய ஒன்றியப் படைகள் தாக்குதல் தொடுத்தனர்
- 4 ஏப்ரல் 2012: சோமாலியத் தலைநகரில் நாடக அரங்கில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு
- 27 மார்ச் 2012: சோமாலியாவில் அல்-சபாப் போராளிகள் தமது முக்கிய தளத்தை இழந்தனர்
- 11 மார்ச் 2012: சோமாலிய அல்-சபாப் போராளிகள் எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல்
- 19 பெப்ரவரி 2012: சோமாலியாவில் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது
சோமாலியாவின் தலைநகர் மொகடீசுவில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் மூன்று அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். பனாடிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றிலேயே இத்தாகுதல் இடம்பெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தற்கொலைக் குண்டுதாரி பெண் வேடத்தில் விழா நடைபெறும் இடத்துக்குள் நுழைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குண்டுதாரி அல்-கைடாவுடன் தொடர்புடைய "அல்-சபாப்" என்ற தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. ஆனாலும் எக்குழுவும் இதுவரை இத்தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை.
சோமாலியாவின் கல்வி, உயர்கல்வி, மற்றும் சுகாதார அமைச்சர்களே கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
செப்டம்பரில் இதே போன்றதொரு தாக்குதலில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அதிகாரிகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு அல்-சபாப் உரிமை கோரியிருந்தது.
[தொகு] மூலம்
- "Deadly Suicide Blast Rips Through Hotel in Somalia". வொயிஸ் ஒஃப் அமெரிக்கா, டிசம்பர் 3, 2009
- "Somalia graduation day suicide attack condemned". பிபிசி, டிசம்பர் 3, 2009
