உகாண்டா மன்னர்களின் கல்லறைகள் தீக்கிரையாகின
புதன், மார்ச் 17, 2010
- 17 பெப்ரவரி 2025: ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
- 17 பெப்ரவரி 2025: 2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்
- 17 பெப்ரவரி 2025: எபோலா நச்சுயிரி உகாண்டாவின் தலைநகருக்கும் பரவியுள்ளதாக எச்சரிக்கை
- 17 பெப்ரவரி 2025: உகாண்டாவின் கிழக்கே நிலச்சரிவு, பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: புலப்படாத சிறுவர்களின் 'கோனி 2012' பரப்புரைக்கு பன்னாட்டு நீதிமன்ற வழக்குத்தொடுநர் ஆதரவு
உகாண்டா மன்னர்களின் கல்லறைகள் தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து அங்கு ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் வெடித்துள்ளன. இது விசமிகளின் செயல் எனக் கருதப்படுகிறது.
கலவரங்களை அடக்க தலைநகர் கம்பாலாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு தீ எப்படிப் பரவியது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
யுனெஸ்கோவினால் பட்டியலிடப்பட்டுள்ள இந்தக் கல்லறைகள் புகாண்டா இராச்சியத்தைச் சேர்ந்த மன்னர்கள் நால்வரின் கல்லறைகள் இங்கு உள்ளன. இவை 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை.
தற்போதைய புகாண்டா அரசரின் ஆதரவாளர்கள் தமது சுயாட்சியைக் குறைக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிராக சென்ற ஆண்டு இங்கு கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அழிந்த நினைவுச் சின்னங்கள் அருகே மக்கள் கவலையுடன் காணப்படுகிறார்கள் என பிபிசி செய்தியாளர் ஜோசுவா முமாலி தெரிவித்தார்.
உகாண்டாவின் நான்கு பண்டைய இராச்சியங்களில் புகாண்டா மிகப்பெரியதாகும்.
மூலம்
[தொகு]- "Uganda royal tombs gutted by fire". பிபிசி, மார்ச் 17, 2010