விக்கிசெய்திகள் தொகுப்பு: ஜூலை 2009

விக்கிசெய்தி இலிருந்து
  • ஜூலை 30, 2009:
    • மால்டோவா பொதுத் தேர்தலில் ஆளும் பொதுவுடமைக் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. (ஆர்டீஈ)
    • இசுப்பானியாவின் மலோர்க்கா தீவில் இடம்பெற்ற கார்க் குண்டுக் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (ஸ்ட்ரெயிட் டைம்ஸ்)
    • அல்ஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 படைத்துறையினர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
  • ஜூலை 29, 2009:
  • ஜூலை 28, 2009:
    • கரிபியன் பகுதியில் துர்கசு கைகோசு தீவுப் பகுதியில் 200 எயிட்டிய சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் சென்றுகொண்டிருந்த படகொன்று மூழ்கியதில் பலர் காணாமல் போயுள்ளனர். (பிபிசி)
    • பாலியல் விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, ஜம்மு–காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா பதவி விலகினார். (த டைம்ஸ்)
  • ஜூலை 27, 2009:
    • மத்தியதரைப் பகுதியில் 8 பேரை பலியெடுத்த காட்டுத்தீ குரோவேசியா வரை பரவியது. (த டைம்ஸ்)
  • ஜூலை 26, 2009:
    • சூறாவளி காரணமாக போலந்தில் 7 பேரும் செக் குடியரசில் இருவரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
    • இந்தியா அரிஹந்த் என்ற தனது முதலாவது அணு ஆற்றலினாலான நீர்மூழ்கிக் கப்பலை வெள்ளோட்டம் விட்டது. (சின்குவா)
    • செச்சினியத் தலைநகர் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
  • ஜூலை 25, 2009:
    • தென்னிலங்கையின் பேருவளையில் இரண்டு முஸ்லிம் மதக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்களில் மூவர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டது.
    • முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய பிரித்தானிய இராணுவ வீரர்களில் இதுவரை உயிர் வாழ்ந்து வந்த இறுதி வீரரான ஹரி பச் தன்னுடைய 111 ஆவது வயதில் இறந்தார். (பிபிசி)
  • ஜூலை 24, 2009:
    • உறைந்த விந்துவில் இருந்து பெரும் சீனா பாண்டா ஒன்றை உருவாக்கியுள்ளது. (பிபிசி)
    • கனாரியின் பெரும் தொலைநோக்கி, உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி, ஸ்பெயினில் திறந்துவைக்கப்பட்டது. (நியூயோர்க் டைம்ஸ்)
    • ஈரானில் 153 பயணிகளுடன் சென்ற விமானம் வீழ்ந்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
    • இலங்கையில் தனது தூதரகத்தை மூடிவிட சுவீடன் தீர்மானித்துள்ளது. (வீரகேசரி)
    • இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவராக சுசீலோ பாம்பாங் யுதயோனோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏபி)
    • ஸ்பெயினின் வடகிழக்கில் காட்டுத் தீ பரவியதில் 5 தீயணைப்பாளர்கள் இறந்தனர். (Sky News)
  • ஜூலை 23, 2009:
    • திருகோணமலைக்கும் மன்னாருக்கும் இடையில் நேரடி பேருந்து சேவை ஆரம்பமானது. (வீரகேசரி)
    • அம்பாறையில் 14 வயது தமிழ் மாணவி ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளாகிப் படுகொலை செய்யப்பட்டார். (தினகரன்)
    • இராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்கள் இலங்கையின் வடக்கு கடலில் கரையொதுங்கியுள்ளது. (தினகரன்)
  • ஜூலை 22, 2009:
    • சூடானில் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு இடையில், 22 ஆண்டுகளாக இருந்து வந்த எல்லைத் தகராறு பன்னாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்தது. (பிபிசி)
    • 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுமையான சூரிய கிரகணம் ஆசியாவின் பல இடங்களிலும் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் நிகழ்ந்தது. (ஏபிசி)
    • யாழ்ப்பாணம்-கண்டி ஏ-9 நெடுஞ்சாலை பொதுமக்களின் பாவிப்பிற்கு திறக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு அறிவித்தது.
  • ஜூலை 21, 2009:
    • சப்பானியப் பிரதமர் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து ஆகஸ்ட் 30இல் பொதுத்தேர்தலுக்கு நாள் குறித்தார். (சின்குவா)
    • சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கிடைத்தது. (தினகரன்)
    • வவுனியா-திருகோணமலை ஏ-29 நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. (தினகரன்)
    • தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செல்வராசா பத்மநாதனைத் தமது புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். (தமிழ்நெட்)
  • ஜூலை 20, 2009:
    • மும்பை தாக்குதல்களில் கைதான ஒரே குற்றவாளியான முகம்மது கசாப், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். டைம்ஸ் ஒஃப் இந்தியா)
    • மேற்கு கனடாவில் காட்டுத்தீ பரவியதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். (ஏஎஃப்பி)
    • இந்தியாவும் ஐக்கிய அமெரிக்காவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. (பிபிசி)
  • ஜூலை 18, 2009:
    • உலகின் வயதில் கூடிய மனிதர் ஹென்றி அலிங்கம் 113 வது வயதில் இறந்தார். முதலாம் உலகப் போரில் பங்கெடுத்த பிரித்தானிய ரோயல் வான்படையின் போர்வீரர்களில் உயிரோடுக்கும் இருவரில் ஒருவர் இவர். (பிபிசி)
    • சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 47 பேர் காயமடைந்தனர். (குரோனிக்கல்)
  • ஜூலை 16, 2009:
    • சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8 வீத வளர்ச்சியை எட்டுவதற்கான தளத்தில் சென்று கொண்டிருப்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டின. (பிபிசி)
    • பப்புவா நியூ கினியில் 6.1 புள்ளி நிலநடுக்கம் பதிவானது. (RTÉ)
    • சிகாகோவில் உள்ள 110-மாடி சியேர்ஸ் கோபுரம் விலிஸ் கோபுரம் எனப் பெயர் மாற்றப்பட்டது. (பிபிசி)
  • ஜூலை 15, 2009:
    • நியூசிலாந்தின் தெற்கு தீவிற்கு அப்பால் 7.6 புள்ளி நிலநடுக்கம் பதிவானது. (ஏபி)
    • எண்டெவர் விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையம் நோக்கி ஏவப்பட்டது. (பிபிசி)
  • ஜூலை 14, 2009:
    • மலேசியாவில் மானிக் ஊராய் தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி பாஸ் என்ற பான்-மலேசிய இசுலாமியக் கட்சி வெற்றி பெற்றது. (வணக்கம் மலேசியா)
    • ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 28வது தலைவராக போலந்தின் முன்னாள் பிரதமர் யேசி பூசெக் தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
    • த ஹேக்கில் உள்ள போர் குற்ற விசாரணை மன்றத்தில் நிறுத்தப்பட்ட லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லர் தனக்கு எதிராகக் கூறப்பட்ட போர் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறி அவற்றை நிராகரித்தார். (பிபிசி)
  • ஜூலை 13, 2009:
    • பாகிஸ்தான், மியான் சன்னு நகரில் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
  • ஜூலை 12, 2009:
    • தெற்கு பெருவில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (சிபிஎஸ்)
  • ஜூலை 11, 2009:
    • சீனாவில் கடந்த சில் வாரங்களாக இடம்பெற்ற இனக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்தது. (சீஎனென்)
  • ஜூலை 10, 2009:
    • பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ மீதான விசாரணைகள் ஆறு வார இடைவெள்ளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்தது. (பிபிசி)
  • ஜூலை 9, 2009:
    • சீனாவின் யுனான் மாகாணத்தில் இடம்பெற்ற 5.7 அளவை நிலநடுக்கம் காரணமாக 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்துள்ளனர். (பிபிசி)
    • பாகிஸ்தான், வசிரிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற அமெரிக்கத் தாக்குதலில் 50 தாலிபான்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
  • ஜூலை 8, 2009:
    • மதுரை அருகே பட்டாசுத் தொழிற்சாலை வெடித்து 17 பேர் கொல்லப்பட்டனர். (தினத்தந்தி)
    • 35வது ஜி8 உச்சி மாநாடு இத்தாலியில் ஆரம்பமானது. (பிபிசி)
  • ஜூலை 7, 2009: பாகிஸ்தான், தெற்கு வசிரிஸ்தானில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
  • ஜூலை 6, 2009:
    • சீனாவின் சின்சியாங் பகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டு 800 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
    • கிறித்தவ விவிலியத்தின் ஆரம்பகால நூலின் 800 பக்கங்கள் இணையத்தில் பார்வைக்கு வக்க்கப்பட்டன. (பிபிசி)
  • ஜூலை 5, 2009:
    • இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு விபத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
    • ரொஜர் ஃபெடரர் 2009 விம்பிள்டன் டென்னிஸ் பந்தயப் போட்டி இறுதி ஆட்டத்தில் அண்டி ரொடிக்கை வென்று |பீட் சாம்பிரசின் கிராண்ட் சிலாம் சாதனையை முறியடித்தார். (பிபிசி)
  • ஜூலை 4, 2009:
    • 2009 விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரியான வீனசை வென்றார். (டெய்லி டெலிகிராஃப்)
    • வட கொரியா ஏழு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் சோதித்தது. (சின்குவா)
    • தெற்கு ரஷ்யாவில் இங்குஷேத்தியாவில் ஒன்பது செச்னிய காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
  • ஜூலை 3, 2009:
    • வணங்காமண் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டது. (தினமலர்)
    • ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் டைனசோர்களின் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (பிபிசி)
  • ஜூலை 2, 2009:
    • ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதென தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (பிபிசி)
    • எச்1என்1 தீநுண்மத்திற்கு எதிரான தடுப்பு மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)
    • கத்தாரில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 16 இந்தியர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். (தினத்தந்தி)
  • ஜூலை 1, 2009: இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நிருபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். (தினத்தந்தி)

மேலும் பார்க்க[தொகு]