ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 28, 2014

இலங்கை தமிழர்கள் தங்களின் நாட்டை விட்டு பல நாடுகளுக்கு சென்று அகதிகளாக தஞ்சமடையும் துயர சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு உள்ளது. இந்த வரிசையில் அதிகமாக ஆஸ்திரேலியா நாட்டில் தஞ்சமடைகிறார்கள். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சமடைய 152 இலங்கை அகதிகள் படகில் சென்றுள்ளார்கள். அவர்கள் சென்ற படகு ஆஸ்திரேலியாவிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 250 கி.மீட்டர்கள் தூரத்தில் எண்ணெய்க் கசிவின் காரணமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய நாட்டின் வானொலி தெரிவித்துள்ளது.


மூலம்[தொகு]