ஆப்கானித்தானில் 20 இராணுவத்தினர் உயிரிழப்பு, சனாதிபதியின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு
- 27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
- 21 செப்டெம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு
ஞாயிறு, பெப்பிரவரி 23, 2014
ஆப்கானித்தானில் குனார் மாகாணத்தில் தாலிபான்களின் தாக்குதலில் குறைந்தது 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏழு இராணுவத்தினரை உயிருடன் தாம் கைப்பறியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானித்தான் அரசுத்தலைவர் ஹமீட் கர்சாய் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கை வரவிருந்தார். இன்றைய தாலிபான் தாக்குதல்களை அடுத்து அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிய அரசுத்தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் அரசுத்தலைவர் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இவ்வாண்டு இறுதியளவில் வெளிநாட்டுப் படையினர் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறவிருக்கின்றனர். ஏப்ரல் தேர்தலில் 11 பேர் அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். கர்சாயின் பதவிக்காலம் முடிவடைவதால், அவர் தேர்தல்களில் போட்டியிட முடியாது.
இன்றைய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான போராளிகள் ஈடுபட்டதாக ஜெனரல் முகம்மது சாகிர் அசிமி தெரிவித்தார். தாக்குதலில் ஒரு போராளியும் உயிரிழந்தார். ஆறு இராணுவத்தினரையே தாலிபான்கள் பிடித்துச் ந்சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
தாக்குதலை ஒழுங்குபடுத்த இராணுவத்தில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளும் உதவியிருக்கக் கூடும் எனத் தாம் நம்புவதாக குனார் மாகாண ஆளுனர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- Afghan soldiers die as Taliban attack checkpoint in Kunar, பிபிசி, பெப்ரவரி 23, 2014
- Afghan President postpones SL visit, டெய்லிமிரர், பெப்ரவரி 23, 2014