இசுரேல் போர்க்குற்றங்கள் இழைத்ததாக ஐநா குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டம்பர் 16, 2009


இசுரேல் இந்த ஆண்டின் துவக்கத்தில் காசா நிலப்பரப்பு மீது நடத்திய தாக்குதலின்போது, போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், பன்னாட்டு மனிதநேய சட்டங்களை மீறியதாகவும் ஐக்கிய நாடுகளின் விசாரணை கூறியுள்ளது.


இசுரேல் பொது்மக்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும், பாலத்தீன ஆயுதக் குழுக்களும் போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், இந்த விசாரணைக்கு தலைமை வகித்த போர்க் குற்றங்கள் குறித்த முன்னாள் சட்ட நடவடிக்கை அதிகாரி ரிச்சர் கோல்ட்ஸ்டோன் கூறியுள்ளார்.


இந்த விசாரணையுடன் ஒத்துழைக்க இசூரேல் மறுத்து விட்டது. இதற்கு உத்திரவிட்ட ஐநாவின் மனித உரிமை கவுன்சில் பாரபட்சமாக செயல்பட்டது என்று இசுரேஸ் கூறியது.

மூலம்[தொகு]