சாத்தான்குளம் கொலை வழக்கு

விக்கிசெய்தி இலிருந்து

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எஸ்.ஐ கொரோனாவால் பலி..!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பால்துரை, கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில், வியாபாரிகள் ஜெயராஜ், மகன் பெனிக்ஸ், ஆகியோர் இறந்தனர். வழக்கை விசாரித்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்,, எஸ்.எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கடந்த 24ம் தேதி, எஸ்.எஸ்.ஐ., பால்துரைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]

  • [1] சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எஸ்.ஐ கொரோனாவால் பலி..!!| TamilNews 24x7.com Monday, Aug 10,2020 ,09:53:39am