சிகரம் சதிஷ்
[1] : சதிஷ்குமார்
புனைப் பெயர்கள்: சிகரம்சதிஷ், ஆதவன்
பிறந்த தேதி: 21 மே 1983
பெற்றோர்: சிதம்பரம் - குணசுந்தரி
பிறந்த ஊர்: கீரமங்கலம் - புதுக்கோட்டை மாவட்டம் பணி: ஆசிரியர்
கல்வித்தகுதி: முதுகலை வணிகமேலாண்மை முதுகலை பொதுநிர்வாகம் முதுகலை சமூகப்பணி முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு.
விருதுகள்: சிகரம் தொட்ட ஆசிரியர், Dr.ராதாகிருஷ்ணன் விருது விவேகானந்தர் தேடிய கனவு இளைஞர், மகாத்மா காந்தி விருது, ஒளிரும் நேர்மறைச் சிந்தனையாளர் விருது, சமூகச் செயற்பாட்டாளர் விருது. அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் சாதனையாளர் விருது,
படைப்புகள்: தமிழனென்ற கர்வம் எனக்குண்டு, இந்தப்புத்தகம், பாஸ்கர் the அதிசய MAN
அவளும் நானும், குழந்தை தொழிலாளியின் மரண வாக்குமூலம், எல்லாமானவள், பூமியை வாழ விடு, பவனி வருகிறாள் பவானி, மீண்டு(ம்) வா சுதந்திரமே, இது காளைக்கான போராட்டம் அல்ல, என்னும் இவரது கவிதைகள் சிறப்பானவை.
இப்படிக்கு நான் எனும் நூலிலுள்ள அவளும் நானும் கவிதை குமுதம் சினேகிதி இதழிலும் வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
- பூமியை வாழ விடு* கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் பாராட்டினைப் பெற்றது
இதழியல் பணி: சிகரம் இதழின் நிறுவனர்.
குமுதம் சிநேகிதி இதழில் கனவு ஆசிரியர்கள் என்னும் தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி இருக்கின்றார்..
புதுவிழுது இதழில் கனவு மெய்ப்பட வேண்டும்- தொடர் கட்டுரை.
கல்கி,குமுதம் சிநேகிதி, தினமணி, மேன்மை,இனிய நந்தவனம்,புதுவரவு உள்ளிட்ட இதழ்களில் 100 க்கும் மேற்பட்ட சிறப்புக்கட்டுரைகள்.
சிறப்புகள்: 12 ம் வகுப்பில் ஒரு பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர் நன்கொடையாளர்கள் மூலம் வீடற்ற 12 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார் நீட் தேர்வில் தவறியவர்களுக்கு பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்து அதிலிருந்து 6 மாணவர்கள் தற்போது மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர் 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் பயில காரணமாக இருந்திருக்கின்றார்
தன்னம்பிக்கை பேச்சாளர்:
இதுவரை 1,50000 க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்களிடம் கலந்துரையாடி இருக்கின்றார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் கலந்துரையாடி இருக்கின்றார்
பிற பணிகள்: கல்வியாளர் சங்கமம் அமைப்பின் நிறுவனர் புதிய தலைமுறை இந்துதமிழ் திசை ஆகியவற்றுடன் இணைந்து கல்வியின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நிகழ்வுகளை நடத்தியவர்
கோடை பண்பலை மற்றும் இலங்கை வானொலி ஆகியவற்றில் இவரின் பல்வேறு கவிதைகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை, கலைஞர் செய்திகள் தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விவாத மேடைகளிலும் உரையாற்றி இருக்கின்றார்.
அமெரிக்கா தொலைக்காட்சியான TET -இல் சிறப்பு விருந்தினர் பகுதியில் மனம் திறந்து என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார்.
- மாணவர்களையும், மரங்களையும் வளர்த்துவிட்டால்,*
- இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்* என்பது இவரது கொள்கை.