தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்பட உள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளது.மணல் தட்டுப்பாட்டை போக்க தனியார் நிறுவனம் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படும்; மணல் தரமாக இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை.