திருநங்கைகள் கொண்டாட்டத்துடன் வேட்பு மனுத்தாக்கல்

விக்கிசெய்தி இலிருந்து

தேமுதிக சார்பில் போட்டியிட மனு செய்த திரு நங்கைகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் ராதிகா என்ற திருநங்கை சேலம் மாநராட்சி 18 வது டிவிசனில் போட்டியிட வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.

அவர் இன்று தாரை தப்பட்டை மேள தாளத்துடன் திருநங்கைகள் புடைசூழ நடனமாடியபடி வந்து மனுதாக்கல் செய்தார். தற்போது சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்கும் விதமாக திருநங்கைகள் அரசியல், அரசு வேலை என வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் பிரித்திகா யாசினி என்ற திருநங்கை நீதிமன்றம் வரை சென்று போராடி உதவி ஆய்வாளராக காவல்துறையில் பணியில் அமர்ந்துள்ளார். தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவி என்ற திருநங்கை போட்டியிட்டார்.

அதேபோல் மதுரை கிழக்கு தொகுதியில் பாரதி கண்ணம்மாவும், மதுரை தெற்கு தொகுதியில் அனுஷ்யஸ்ரீ என்ற இரண்டு திருநங்கைகள் இந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.