பலாலி இராணுவ தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்
Appearance
தொடர்புள்ள செய்திகள்
- 17 பெப்பிரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்பிரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்பிரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்பிரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
- 17 பெப்பிரவரி 2025: ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு

செவ்வாய், ஏப்பிரல் 24, 2007
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டதாகவும் 6 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன. விடுதலைப் புலிகள் நடத்திய வான்வழித் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டு மேலும் 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]மூலம்
[தொகு]- Tamil Tigers in deadly air attack, பிபிசி, ஏப்ரல் 24, 2007