பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு
புதன், சனவரி 13, 2010
- 17 பெப்ரவரி 2025: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்ரவரி 2025: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாதுகாப்பற்ற கடவை ஒன்றைத் தாண்டும் போது தொடருந்துடன் மோதியதில் குறைந்தது 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மியான் சன்னு என்ற நகரில் இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் 12 சிறுவர்கள் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பேருந்து சாரதியும் உயிரிழந்தார்.
பயணிகள் தொடருந்தில் பயணம் செய்தவர்கள் எவரும் காயமடையவில்லை.
பாகிஸ்தானில் ரெயில்வே கடவைகள் பொதுவாக ஆளற்றவை, மற்றும் பாதுகாப்பற்றவை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் விபத்துக்கள் இங்கு அடிக்கடி இடம்பெறுவதுண்டு.
இன்று புதன்கிழமை காலையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பனிப்புகார் அவ்வழியில் நிறைந்திருந்ததால் இதனால் பேருந்து குவெட்டாவில் இருந்து லாகூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்துடன் மோதியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மூலம்
- "School children die in Pakistan crash". பிபிசி, ஜனவரி 13, 2010
