பாக்கித்தானின் சிறுபான்மையின அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்ரவரி 2025: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
புதன், மார்ச் 2, 2011
பாக்கித்தானின் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சாபாஸ் பட்டி தலைநகர் இசுலாமாபாத் நகரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டி சென்று கொண்டிருந்த வாகனம் மீது இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமைச்சர் உயிரிழந்தார்.
பணிக்காக வீட்டில் இருந்து அமைச்சர் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அதிகாரி முகமது இக்பால் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு கிறித்தவ உறுப்பினராக பட்டி விளங்கினார். இவர் பாக்கித்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தவர். இதனால் இவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து வந்தது.
கடந்த சனவரி மாதத்தில், இச்சட்டத்தை எதிர்த்து வந்த பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் டசீர் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
பாக்கித்தானில் இசுலாம் மதத்தை எதிர்ப்போரின் மத நிந்தனைச் செயல் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, அபராதம் முதல் தூக்குத் தண்டனை வரை விதிக்கப்படும்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- பாக்கித்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் படுகொலை, புதன், சனவரி 5, 2011
மூலம்
[தொகு]- Pakistan Minorities Minister Shahbaz Bhatti shot dead, பிபிசி, மார்ச் 2, 2011
- Militants say killed Pakistani minister for blasphemy, ராய்ட்டர்ஸ், மார்ச் 2, 2011