பாக்கித்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 70 பேர் பலி
Appearance
வெள்ளி, மே 28, 2010
பாகிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்ரவரி 2025: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
பாகிஸ்தானின் அமைவிடம்
பாக்கித்தானின் லாகூர் நகரில் உள்ள அகமதியா பிரிவைச்சார்ந்த இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
லாகூரின் மிடில் டவுன் மற்றும் கர்கி சகு பகுதிகளில் வெள்ளிக்கிழமை வழிபாட்டில் இருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகள் வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மசூதிகளிலும் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாக்கித்தானின் தாலிபான் அமைப்பு காரணமாக இருக்கலாம் காவல்துறை கருதுகிறது.
தங்களை முசுலிமாக அகமதியா சமூகம் கருதினாலும் பாக்கித்தானில் அச்சமூகம் முசுலிமாக கருதப்படுவதில்லை. தீவிரவாத போக்குடைய சில அமைப்புகள் அகமதியா சமூகத்தை சார்ந்தவர்களை தாக்கியிருந்தாலும் அவர்களின் வழிபாட்டு இடம் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மூலம்
[தொகு]- Pakistan mosque attacks in Lahore kill scores, பிபிசி, மே 28, 2010
- Taliban militants attack Lahore mosques, kill 70, டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 28, 2010