விக்கிசெய்திகள் தொகுப்பு: ஆகஸ்ட் 2009

விக்கிசெய்தி இலிருந்து
  • ஆகஸ்ட் 30, 2009:
    • ஜப்பானில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் யுகியோ அட்டொயாமா தலைமையிலான எதிர்க்கட்சி பெரும் வெற்றி பெற்றது. (நியூயோர்க் டைம்ஸ்)
    • தலாய் லாமா தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டார். (அல்ஜசீரா)
  • ஆகஸ்ட் 29, 2009: இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது. (இண்டியன் எக்ஸ்பிரஸ்)
  • ஆகஸ்ட் 28, 2009: நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் (STS-128) தனது 37வது பயணத்தை ஆரம்பித்தது. (ஏஎஃப்பி)
  • ஆகஸ்ட் 27, 2009:
    • கொழும்பில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டன். (வீரகேசரி)
    • வடகிழக்கு பர்மாவில் அரசப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (ஏஎஃப்பி)
  • ஆகஸ்ட் 26, 2009: இலங்கையில் 1989ம் ஆண்டு கடத்தல் தொடர்பான குற்றம் புரிந்த, முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி டக்ளஸ் பீரிஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. (டெய்லிமிரர்)]
  • ஆகஸ்ட் 25, 2009:
    • மைக்கல் ஜாக்சன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் மருத்துவ தடயவியல் நிபுணர் அறிவித்துள்ளார். (ராய்ட்டர்ஸ்)
    • தெற்கு ஆப்கானிஸ்தான், கண்டகார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
    • செச்சினியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 3 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
    • ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர் கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
    • வன்னிப் படையெடுப்பை நடத்திய இலங்கை படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். சனல் 4
  • ஆகஸ்ட் 24, 2009: வியநாம் போரின் போது கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகளின் புதைகுழிகள் இரண்டு மத்திய வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டன. (சைனா டெய்லி)
  • ஆகஸ்ட் 21, 2009:
    • வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் பதுங்கு தலத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
    • செச்னியாவில் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
  • ஆகஸ்ட் 20, 2009: 1988 இல் இடம்பெற்ற லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி மானிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டார். (பிபிசி)
  • ஆகஸ்ட் 17, 2009:
    • ரஷ்யாவின் வடக்கு கவ்காசில் காவல்நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லாப்பட்டு 60 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ்)
    • ஜூலை மாதத்தில் காணாமல் போயிருந்த எம்வி ஆர்க்டிக் கடல் என்ற ரஷ்ய சரக்குக் கப்பலை சுவீடனின் கரைக்கப்பால் ரஷ்ய கடற்படை கண்டுபிடித்தது. (சீஎனென்)
  • ஆகஸ்ட் 16, 2009:
    • சுமாத்திராவின் சிபெருட் தீவுக்கருகில் 6.9 நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறந்தது 7 பேர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)
    • இரண்டு ரஷ்ய போர்விமானங்கள் பயிற்சியின் போது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.(பிபிசி)
  • ஆகஸ்ட் 15, 2009: கொலம்பியா தனது ஏழு இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா பாவிப்பதற்கான உடன்படிக்கைக்கான பேச்சுக்களை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. (பிபிசி)
  • ஆகஸ்ட் 14, 2009:
    • பாகிஸ்தான் தனது முதலாவது பன்னாட்டு சரக்குத் தொடருந்து சேவையை இஸ்லாமாபாத்திற்கும் இஸ்தான்புல்லிற்கும் இடையே ஆரம்பித்தது. (பிபிசி)
    • இந்தியப் பெருங்கடலில் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே 77 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் வந்த படகை அவுஸ்திரேலியா வழிமறித்து தடுத்து நிறுத்தியது. தினகரன்)
    • பிலிப்பைன்சில் அரச படைகளுக்கும் முஸ்லிம் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் 53 போராளிகளும் 23 படையினரும் கொல்லப்பட்டனர். தினாகரன்)
    • துர்கஸ் கைகோசு தீவுகளில் அரச ஊழல் காரணமாக ஐக்கிய இராச்சியம் தனது நேரடி ஆட்சியை அடுத்த இரு ஆண்டுகளுக்கு அறிவித்தது. (பிபிசி)
  • ஆகஸ்ட் 13, 2009:
    • ரஷ்யாவின் தாகெஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்களில் 4 காவல்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
    • இட்லரால் கையெழுத்திடப்பட்ட மைன் கம்ப் நூலின் மூலப்பிரதி ஒன்று லண்டனில் £21,000 களுக்கு ஏலத்தில் விற்கப்படட்து. (பிபிசி)
  • ஆகஸ்ட் 12, 2009:
    • தனது விண்மீன்களின் சுற்றுத் திசைக்கு எதிராகச் சுற்றும் வாஸ்ப்-17பி (WASP-17B) என்ற முதலாவது கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)
  • ஆகஸ்ட் 11, 2009:
    • அந்தமான் தீவுகளில் 7.6 அளவு நிலநடுக்கமும் டோக்கியோவில் 6.5 அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டன. (பிபிசி)
    • சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்கத்தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். (ஐரிஷ் இண்டிபெண்டெண்ட்)
    • விண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் இரண்டு கோள்களிடையே கடும் மோதல் ஒன்று இடம்பெற்றதை நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது. (பிபிசி)
  • ஆகஸ்ட் 10, 2009:
    • கிழக்கு இமயமலையில் 244 தாவரங்கள், 16 நிலநீர் வாழிகள் உட்பட 350 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (சின்குவா)
    • ஈராக்கில் குண்டுத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)
  • ஆகஸ்ட் 8, 2009:
    • மவுரித்தேனியாவில் பிரெஞ்சு தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)
    • ஈழப்போர் முடிவின் பின்னர் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல்கள் இலங்கையில் இடம்பெற்றன. (ராய்ட்டர்ஸ்)
  • ஆகஸ்ட் 7, 2009: ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
  • ஆகஸ்ட் 6, 2009:
    • விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
    • மும்பையில் 2003 இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)
    • பாகிஸ்தானின் சிந்து நதியில் பேருந்து ஒன்று மூழ்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
  • ஆகஸ்ட் 5, 2009: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் வருகையை ஒட்டி தான் தடுத்து வைத்திருந்த இரண்டு அமெரிக்க செய்தியாளர்களை வட கொரியா விடுவித்தது. (சிஎனென்)
  • ஆகஸ்ட் 4, 2009: மெல்பேர்ணில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சோமாலிய தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். (தி ஏஜ்)
  • ஆகஸ்ட் 3, 2009:
    • மேற்கு மெக்சிக்கோவில் பல நிலநடுக்கங்கள் பதிவாயின. (பிபிசி)
    • தெற்கு சூடானில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 185 பேர் கொல்லப்பட்டனர்.(பிபிசி)
  • ஆகஸ்ட் 2, 2009:
    • கனடாவில் அல்பேர்ட்டாவில் இசைநிகழ்ச்சியொன்றில் மேடை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். (சிபிசி)
    • கிழக்கு ஜெருசலேம் நகரில் 1956 ஆம் ஆண்டில் இருந்து வசித்துவந்த 9 பாலஸ்தீனக் குடும்பங்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். (பிபிசி)
    • இந்தோனேசியாவின் பப்புவாவில் 16 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போனது. (ஏஎஃப்பி)
    • வடக்கு நைஜீரியாவில் இடம்பெற்றுவரும் மதக்கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்தது. (சிஎனென்)
  • ஆகஸ்ட் 1, 2009:
    • மலேசியா, கோலாலம்பூரில் விசாரணை இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவான சட்டமூலத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (அல்ஜசீரா)
    • பாகிஸ்தானின் பஞ்சாபில் இடம்பெற்ற மதக் கலவரங்களில் குறைந்தது அறு கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
    • மங்கோலியாவில் 1930களில் முன்னைய கம்யூனிச அரசால் புதைக்கப்பட்ட பழைமையான பல பௌத்தச் சின்னங்கள் கோபி பாலைவனத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. (பிபிசி)

மேலும் பார்க்க[தொகு]