இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 1242 கைதிகள் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 5, 2014

இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசுத்தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு வெலிக்கடை உட்பட நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 1242 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


கண்டி போகம்பரை சிறைச்சாலை

யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 கைதிகளும் நாடாளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 36 சிறைச்சாலைகளிலிருந்த 1233 கைதிகளும் (1194 ஆண்கள், 39 பெண்கள்) கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]