நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 23, 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் ஆத்திரேலியாவுக்கான பிரதிநிதிகளின் விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.


ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள்

ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் ஆறு பேர் போட்டி எதுவும் இன்றித் தெரிவானார்கள். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கான 4 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 6 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தல் நேற்று சனிக்கிழமை அம்மாநிலத்தில் நடைபெற்றது.


குலசேகரம் சஞ்சயன், சேரன் சிறிபாலன், தர்சன் குணசிங்கம், பாலசிங்கம் பிரபாகரன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


ஏனைய மாநிலங்களில் இருந்து போட்டியின்றித் தெரிவானோர் விபரம்:


  • விக்டோரியா:
    • பாலச்சந்திரன் ஜனனி
    • சந்தியாப்பிள்ளை டொமினிக் சேவியோ
    • சண்முகானந்தகுமார் துரைசிங்கம்

மூலம்[தொகு]