வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்தெம்பர் 24, 2013

இலங்கையின் முதலாவது வட மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ர் பதவிக்கு முன்னாள் உச்ச நீதி­மன்ற நீதி­ய­ரசர் சி. வி. விக்னேசுவரனை நிய­மிப்­ப­தற்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்­தலில் வெற்­றி­ பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஏக­ம­ன­தாக அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளனர்.


யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டமொன்று நேற்று மாலை 4.30 மணியளவில் கூட்­ட­மைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தேர்தல் மூலம் தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் கூட்ட­மைப்பின் செய­லாளர் மாவை. சேனா­தி­ராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எஸ். சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்­டனர்.


இந்தக் கூட்­டத்தில் வட­மா­கா­ண­ச­பையின் முத­ல­மைச்­ச­ரா­கவும் மாகா­ண­ச­பையின் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களின் குழுத் தலை­வ­ரா­கவும் முன்னாள் நீதி­ய­ரசர் சி. வி. விக்­கி­னேஸ்­வரனின் பெயரை திரு­மதி அனந்தி சசி­தரன் பிரே­ரிக்க வவு­னியா மாவட்ட உறுப்­பினர் ஜி. ரி. லிங்­க­நாதன் வழி­மொ­ழிந்தார். இத­னை­ய­டுத்து ஏக­ம­ன­தாக இந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.


வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் தெரி­வான உறுப்­பி­னர்­களின் பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­ட­வுடன் முதலமைச்சர் தெரி­வுக்­கான கடிதம் வட­மா­காண ஆளு­ந­ருக்கு அனுப்­பி­வைப்­பது எனவும் இங்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.


இதற்கிடையில், ஐந்து மாகாண அமைச்­சர்கள் தெரிவு குறித்தும், கூட்டமைப்பினருக்குக் கிடைத்த இரண்டு கூடுதல் இடங்களுக்கு உறுப்பினர்களை நிய­மிப்­பது என்­பது குறித்தும் தீர்­மா­னிப்­ப­தற்­காக கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­க­ளது கூட்டம் இன்று காலை யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.


சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் 38 இடங்களில் 30 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி வரலாற்று ரீதியான சாதனையைப் படைத்திருக்கின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஏழு இடங்களையும், முசுலிம் காங்கிரசு ஒரு இடத்தையும் கைப்பற்றியிருந்தது.


சி. வி. விக்­னேஸ்­வரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அனந்தி சசி­தரன் 87,870, தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் 39,715, இம்­மா­னுவேல் ஆனல்ட் 26,888, சி.வி.கே.சிவ­ஞானம் 26,747, பாலச்­சந்­திரன் கஜ­தீபன் 23,669, கன­க­லிங்கம் சிவா­ஜி­லிங்கம் 22,660, ஐங்கர­நேசன் பொன்­னுத்­துரை 22,268, சந்­தி­ர­லிங்கம் சுகிர்தன் 20,541, கேசவன் சயந்தன் 20,179, விந்தன் கன­க­ரட்னம் 16,463, அரி­ய­குட்டி பரஞ்­சோதி 16,359, ஆறு­முகம் கந்­தையா சர்­வேஸ்­வரன் 14,761, வேலுப்­பிள்ளை சிவ­யோகன் 13,479 வாக்குகள் பெற்றுத் தெரிவாயினர். ஏனையோர் பெற்ற வாக்குகள்: கே.தர்­ம­லிங்கம் 13,016, சபா­ரத்­தினம் குகதாஸ் 11,256, எம்.தம்­பி­ராசா 7,325, ஆர்.ஜெய­சே­கரம் 6,775, வி.சுப்­பி­ர­ம­ணியம் 6,578.


ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டணியில் கந்­த­சாமி கம­லேந்­திரன் 13,632, அங்­கஜன் இரா­ம­நாதன் 10,031 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாயினர். ஏனையோர் பெற்ற வாக்குகள்: சின்­னத்­துரை தவ­ராசா 9,803, ஐயாத்­துரை சிறி­ரங்­கேஸ்­வரன் 5,462, அலெக்சாண்டர் சூசை­முத்து 4,666, பால­கி­ருஷ்ணன் சிவ­குரு 4,611, அப்துல் கரீம் நுவான் சிராஸ் முகமட் 3,323, அந்­தோ­னிப்­பிள்ளை அகஸ்ரின் 2,487, அகி­லதாஸ் சிவக்­கொ­ழுந்து 2,482, குமா­ர­குரு சர்­வா­னந்தன் 2,293, நட­ராஜா தமி­ழ­ழகன் 1,976, நாகன் கணேசன் 1,966, சுந்­தரம் டிவ­க­லாலா 1,963, ஞான­சக்தி சிறி­தரன் 1,939, முடி­யப்பு றெமி­டியஸ் 1,801, கதி­ர­வேலு செவ்வேள் 1,605, கோடீஸ்வரன் றுசாங்கன் 1,174, அகமட் சுல்தான் சுபியான 1,046, மற்றும் நாகனாதி பொன்னம்பலம் 797.


மூலம்[தொகு]