ஆப்கானிய பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானது
திங்கள், மே 17, 2010
- 17 பெப்ரவரி 2025: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை
- 17 பெப்ரவரி 2025: ஆப்கானித்தானில் 20 இராணுவத்தினர் உயிரிழப்பு, சனாதிபதியின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
40 பேரை ஏற்றிச் சென்ற ஆப்கானியப் பயணிகள் விமானம் ஒன்று குண்டூசுக்கும் காபூலுக்கும் இடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் காபூலிற்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் சலாங் பாஸ் என்ற மலைப்பகுதியில் பாமிர் ஏர்வேஸ் விமானம் வீழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இன்று காலையில் இருந்து இவ்விமானம் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில வெளிநாட்டவர்களும் இவ்விமானத்தில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
அமெரிக்க, மற்றும் நேட்டோ மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தை நோக்கி சென்றுள்ளார்கள்.
"38 பயணிகளும் 5 விமானச் சிப்பந்திகளும் இவ்விமானத்தில் பயணித்து உறுதி செய்யப்பட்டுள்ளது," என உள்ளக அமைச்சர் செமராய் பஷாரி தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான பாமிர் ஏர்வேஸ் தனியாருக்குச் சொந்தமானது. கடந்த 1995 முதல் ஆப்கானில் செயல்பட்டு வருகிறது. தினமும் அமீரகத்தில் உள்ள w:துபாய் நகருக்கு சேவை வழங்கி வருகிறது.
மூலம்
[தொகு]- "Afghan passenger plane 'crashes near Salang Pass'". பிபிசி, மே 17, 2010
- "Passenger Plane Crashes in Northern Afghanistan". வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்திகள், மே 17, 2010