சிலியில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
சனி, பெப்ரவரி 27, 2010
- 17 பெப்ரவரி 2025: சிலியில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது
- 17 பெப்ரவரி 2025: சிலியில் பெரும் நிலநடுக்கம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
- 17 பெப்ரவரி 2025: குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை
- 17 பெப்ரவரி 2025: ஐம்பது புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: சிலியின் விமானம் ஒன்று 21 பேருடன் பசிபிக் கடலில் வீழ்ந்தது
தென்னமெரிக்க நாடான சிலியின் நடுப்பகுதியில் இன்று 8.8 அளவு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 708 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் அஞ்சப்படுகிறது.

தலைநகர் சண்டியாகோவில் இருந்து 325 கிமீ தென்மேற்கே, கொன்செப்சியன் நகரில் இருந்து 115 கிமீ வட-கிழக்கே இன்று அதிகாலை 0634 GMT நேரத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாதிகக்ப்பட்ட பிரதேசங்களில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசுத்தலைவர் மிசெல் பாசிலெட் அறிவித்துள்ளார்.
ஹவாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் பசிபிக் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னராக அண்டார்க்டிக்கா, நடு அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.
சண்டியாகோ விமானநிலையம் மூடப்பட்டு அனைத்து வான்சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பரல் என்ற நகரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகருக்கு 20 கிமீ வடக்கேயுள்ள கோலினா என்ற நகரில் வேதித் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றி எரிவதாக சிலியின் தொலைக்காட்சி அறிவித்தது. ஆனாலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கடைசியாக சிலியில் 1960 ஆம் ஆண்டில் 9.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது அங்கு 1,655 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்
[தொகு]- "Massive earthquake strikes Chile". பிபிசி, பெப்ரவரி 27, 2010
- "Chilean quake toll jumps to 708". பிபிசி, பெப்ரவரி 28, 2010