செவ்வாய்க் கோளில் வறண்ட ஏரி கண்டறியப்பட்டுள்ளது
- 17 பெப்ரவரி 2025: சூரியனின் தாக்கத்தாலேயே செவ்வாய் தனது வளிமண்டலத்தை இழந்தது, புதிய ஆய்வுகள்
- 17 பெப்ரவரி 2025: செவ்வாய்க் கோளில் வறண்ட ஏரி கண்டறியப்பட்டுள்ளது
- 17 பெப்ரவரி 2025: நாசாவின் 'மாவென்' விண்கலம் செவ்வாய்க் கோள் நோக்கி சென்றது
- 17 பெப்ரவரி 2025: இந்திய விண்கலம் மங்கள்யான் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: செவ்வாய் மண்ணில் நீர் கலந்திருப்பதை கியூரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது
செவ்வாய், திசம்பர் 10, 2013
செவ்வாய்க்கு நாசா ஆய்வு மையத்தால் அனுப்பி வைக்கப்பட்ட கியூரியோசிட்டி தரையுளவியால் வறண்ட ஏரி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஏரியின் தன்மைகள், வடிவங்களை வைத்துப் பார்க்கும் போது அங்கு நுண்ணியிர்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.
கேல் எரிமலைவாய் பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் நீளம் 50 கி.மீ மற்றும் அகலம் 3 கி.மீ ஆகும்.

அந்த ஏரியின் மேற்புறத்தில் உள்ள பாறைகளின் வடிவங்களின் புகைப்படங்களை கலிபோர்னியா தொழில்நுட்பப் படிப்பகத்தின் ஆய்வாளர் ஜான் கிரோட்சிங்கர் ஆராய்ந்தார். இந்த ஏரி பல ஆயிரம் ஆண்டுகள் நன்னீரைக் கொண்டிருந்திருக்க வேண்டும் என அவர் மேலும் கூறி உள்ளார். இந்த ஏரி Chemolithoautotrophs எனப்படும் நுண்ணுயிரிகள் வாழத் தகுந்த வகையில் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.
முதன்முறையாக செவ்வாய் கோளில் வைத்தே அந்த பாறைகளின் வயதை நாசா விஞ்ஞானிகள் கணக்கிட்டு சாதித்துள்ளனர். இருந்த போதும் உயிர்கள் வாழ்ந்தமைக்கான Total organic carbon பொருட்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர்கள் உயிர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் மேலும் கிடைக்குமா என தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
மூலம்
[தொகு]- Mars Rover Finds Ancient Life-Supporting Lakebed, டிஸ்கவரி.காம், டிசம்பர் 10, 2013
- Nasa's Mars rover Curiosity finds evidence of life-friendly ancient lake, தி டைம்ஸ் ஆப் இந்தியா, டிசம்பர் 10, 2013
