தென் கொரியா 'அறிவியல்' திமிங்கல வேட்டையை முன்மொழிவு
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 17 பெப்ரவரி 2025: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 17 பெப்ரவரி 2025: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
வியாழன், சூலை 5, 2012
சப்பானியத் திட்டத்தினை எதிரொலிப்பதாய் அறிவியல் ஆராய்ச்சிக்கான திமிங்கல வேட்டை எனப்படும் சட்டபூர்வ அனுமதியுடன் திமிங்கலங்களை வேட்டையாடுவதாய் தென் கொரியா முன்மொழிந்துள்ளது.

இவ்வேட்டையானது கொரியப் பெருங்கடலில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. எத்தனை திமிங்கிலங்கள் இவ்வாறு வேட்டையாடப்படும் என அது அறிவிக்கவில்லை.
"மிங்க்கி திமிங்கிலங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு இந்தத் திட்டம் அவசியமானது," என திமிங்கில வேட்டைக்கான பன்னாட்டு ஆணையத்துக்கான தென் கொரியத் தூதுக்குழு தெரிவித்துள்ளது. இத்திட்டம் எப்போது ஆரம்பமாகும் என தென் கொரியா தெரிவிக்கவில்லை. கொரியாவின் இந்த அறிவிப்பை பல உலக நாடுகள் கண்டித்திருக்கின்றன.
கரையோர திமிங்கில வேட்டையாடுதலை மீளத் துவங்குவதே தென் கொரியாவின் முக்கிய குறிக்கோள் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்
[தொகு]- South Korea unveils 'scientific' whaling proposal, பிபிசி, சூலை 4, 2012
- Nations blast S Korea 'scientific' whaling, அல்ஜசீரா, சூலை 5, 2012
