நேபாளத் தலைநகரில் பயணிகள் விமானம் தீப்பற்றி வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்தனர்
- 17 பெப்ரவரி 2025: நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது
- 17 பெப்ரவரி 2025: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்
- 17 பெப்ரவரி 2025: நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: புத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது
வெள்ளி, செப்டெம்பர் 28, 2012
எவரெஸ்டு மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று நேப்பாளத் தலைநகர் காத்மண்டுவின் அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 19 பேரும் கொல்லப்பப்டனர். இறந்தவர்களில் ஏழு பேர் பிரித்தானியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
சீதா ஏர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த இவ்விமானம் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரத்தில் அருகில் உள்ள ஆற்றங்கரை அருகில் வீழ்ந்து தீப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரட்டை இயந்திரங்கள் பொருத்தப்பட்ட டோர்னியர் 228 ரக விமானத்தில் மூன்று நேப்பாள விமானப் பணியாளர்களும், ஏழு பிரித்தானியர்களும், ஐந்து சீனர்களும், ஐந்து நேபாளப் பயணிகளும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை, எனினும் பறவை ஒன்று மோதியிருக்கலாம் என திரிபுவனப் பன்னாட்டு விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானப் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
சிறியரக விமானங்கள் நேப்பாள மலைப்பகுதிகளில் விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகும்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- நேபாள விமான விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு, மே 14, 2012
- சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு, செப்டம்பர் 25, 2011
- நேபாளத்தில் வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு, ஆகத்து 24, 2010
மூலம்
[தொகு]- Plane crashes in Nepal capital, killing all 19 on board, பிபிசி, செப்டம்பர் 28, 2012
- 19 killed as plane crashes after hitting bird in Nepal, சினா, செப்டம்பர் 28, 2012