பாக்கித்தானில் சுரங்க வெடிப்பில் சிக்கி தொழிலாளர்கள் பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்ரவரி 2025: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
திங்கள், மார்ச் 21, 2011
பாக்கித்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வாயு வெடிப்புகளில் குறைந்தது 45 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலர் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர்.
மாகாணத் தலைநகர் குவெட்டாவிற்கு அருகில் உள்ள இச்சுரங்கம் பாதுகாப்பற்றதென சென்ற வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த எச்சரிக்க புறக்கணிக்கப்பட்டிருந்தது.
"சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க நாம் முயன்று வருகிறோம். ஆனாலும், சுரங்கத்தினுள் ஒக்சிசன் பற்றக்குறை உள்ளதால், அவர்களை உயிருடன் மீட்பது கடினமாகவே இருக்கும்," என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கனிமப் பொருட்கள் பெருமளவு காணப்படுகிறது. இச்சுரங்கம் பாக்கித்தான் அரசுக்குச் சொந்தமானது, ஆனாலும் இது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
மூலம்
[தொகு]- Pakistan mine gas explosions 'kill 21' in Balochistan, பிபிசி, மார்ச் 21, 2011
- Pakistan coal mine blast death toll hits 45, survivors unlikely, ராய்ட்டர்ஸ், மார்ச் 21, 2011