பிரேசில் வெள்ளப்பெருக்கில் 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்
- 2 ஜனவரி 2017: பிரேசில் சிறைக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 4 பெப்ரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
வியாழன், ஜனவரி 13, 2011
பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த பெரும் மழையினால் ரியோ டி ஜனெய்ரோ நகருக்கு அருகே உள்ள நகரங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்தனர்.
டெரெசொபோலிசு என்ற மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 130 பேர் உயிருடன் புதையுண்டனர். இங்குள்ள ஆறு ஒன்று பெருக்கெடுத்ததில், பல கட்டடங்கள் நீருள் மூழ்கின. நோவா பிரைபேர்கோ நகரில் மண்சரிவில் 107 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று சாவோ பவுலோ மாநிலத்தில் பெய்த மழையினால் 13 பேர் கொல்லப்பட்டனர். பிரேசிலின் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் $461மில். பெறுமதியான நிவாரண உதவியை பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுப்புவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
மூலம்
- Death toll mounts from flooding in Rio de Janeiro state, பிபிசி, சனவரி 13, 2011
- Scores killed in Brazil flooding, அல்ஜசீரா, சனவரி 13, 2011