பேச்சு:சென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுத் தமிழ் வானொலி பற்றிய பயிலரங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

ஒரு காலத்தில் இலங்கை வானொலியே கதி என்று கிடந்தோம்.அன்று கேட்ட பாடல்கள் ,நாடகங்கள்,செய்திகள் இன்றும் பசுமையாக நினைவலைகளில் வலம் வருகின்றன.என்னதான் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல ஊடகங்களை நமக்குத் தந்தாலும்,செவிகளின் வழி இதயம் தொடும் ஆற்றல் வானொலிக்கு மட்டுமே உண்டு.அயலகத் தமிழ் ஒலிபரப்புகளில் ,வெரிதாஸ் வானொலி,இலங்கை வானொலி,பி.பி.சி ..,சீன வானொலி ,வத்திகான் வானொலி, ஏன்,பாகிஸ்தான்வானொலி கூட கேட்டிருக்கிறோம்.இவையெல்லாம் நிகழ்ச்சிகளை அளிப்பதோடு நின்றுவிடாமல், நேயர்களின் பங்களிப்பையும் வரவேற்றது.அதனால் என் போன்ற நேயர்கள் கட்டுரைகள் எழுதவும்.நிகழ்ச்சிகளைத் தொகுக்கவும் திறம் பெற முடிந்தது என்பதை நான் பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறேன்..

மா.உலகநாதன்,சர்வதேச வானொலி நேயர், திருநீலக்குடி,கும்பகோணம்

உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.--Kanags \பேச்சு 21:34, 21 பெப்ரவரி 2014 (UTC)