போர்க்குற்றங்கள் குறித்த புதிய ஆதாரம்: தமிழகத்தில் அதிர்ச்சி உணர்வுகள் எழுந்துள்ளன
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு

புதன், பெப்ரவரி 20, 2013
இளஞ்சிறுவனின் மீது இராணுவம் திட்டமிட்டு நடத்திய படுகொலை குறித்த புதிய ஆதாரத் தகவல்கள், தமிழகத்தில் அதிர்ச்சியையும், கவலையையும், கோப உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், தமிழ் அமைப்பினர், தமிழ் பிரமுகர்கள் தமது அதிர்ச்சியையும் கோப உணர்வுகளையும் தெரிவித்துள்ளார்கள்.
- விஜயகாந்த் (தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்)
"உலக நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை ஐநா அவை மூலம் கோர வேண்டும்; இந்தியா, இலங்கைக்கு தரும் ஆதரவினை விலக்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்"
- ஜி. ராமகிருஷ்ணன் (சிபிஐ - மார்க்சிஸ்ட்)
"இலங்கை அரசும் அதன் இராணுவமும் நடத்திய மனித உரிமை மீறல் செயல்களுக்கு, குழந்தையின் மீது நிகழ்த்தியிருக்கும் இந்தப் படுகொலை ஒரு சான்றாகும். இலங்கை இராணுவத்தின் இச்செயலால் 'நாகரீகமடைந்த உலகின் தலை' தூக்கில் தொங்குகிறது. குற்றத்திற்குக் காரணமானவர்களும் இக்குற்றத்தை செய்தவர்களும் கடுமையான முறையில் தண்டிக்கப்படவேண்டும்"
தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சிகளில் நேற்று முழுவதும் இந்த ஆதாரங்கள் குறித்து பேசப்பட்டன. இந்தியாவின் பிரபல நாளிதழ்களில் ஒன்றான 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கடிதங்களில் வாசகர்கள் பலரும் தமது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளார்கள். கேலம் மெக்கரே எழுதியிருந்த கட்டுரை, தி இண்டிபென்டென்ட் நாளிதழில் வெளியிடப்பட்டிருந்த அதே நாளில் (நேற்று) 'தி இந்து' நாளிதழும் அக்கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருந்தது.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது, பெப்ரவரி 19, 2013
மூலம்
[தொகு]- பிரபாகரனின் மகன் கொடூரமாகக் கொலை: புகைப்படத்தை வெளியிட்டது சேனல்-4 டி.வி. தினமணி, பெப்ரவரி 20, 2013
- Pictures of Prabakaran's son spark outrage, த இந்து, பெப்ரவரி 20, 2013