65 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இலங்கையில் கண்டுபிடிப்பு
புதன், சூலை 21, 2010
தொடர்புள்ள செய்திகள்
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Evolved_star_fusion_shells.svg/200px-Evolved_star_fusion_shells.svg.png)
65 ஆண்டுகளாக அழிந்துவிட்டது எனக்கருதப்பட்ட இலங்கையின் ஓடன் சமவெளி தேவாங்கு (Loris tardigradus nycticeboides) தற்போது இலங்கையில் வாழ்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Loris_tardigradus.jpg/150px-Loris_tardigradus.jpg)
இத்தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. இலங்கையின் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவ்விலங்கின் வாழ்விடம் சுருங்கி அற்றுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். மேலும் தற்சமயம் இவற்றின் இயற்கை உயிர்த்தொகை நூற்றிற்கும் குறைவானதாகவே இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மூலம்
[தொகு]- Slender hope: A tiny primate is rediscovered after 65 years, சயிண்டிபிக் அமெரிக்கன், ஜூலை 19, 2010
- First ever pictures of mysterious mammal, இலண்டன் விங்கியல் அமைப்பு, ஜூலை 19, 2010