மெக்சிக்கோ சிறையில் ஏற்பட்ட மோதலில் 44 கைதிகள் உயிரிழப்பு
- 21 மார்ச் 2012: மெக்சிக்கோவை 7.4 அளவு கடும் நிலநடுக்கம் தாக்கியது
- 12 மார்ச் 2012: மெக்சிக்கோவில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த 167 உடல்கள் மீட்கப்பட்டன
- 21 பெப்ரவரி 2012: மெக்சிக்கோ சிறையில் ஏற்பட்ட மோதலில் 44 கைதிகள் உயிரிழப்பு
- 6 ஜனவரி 2012: உலகின் உயரமான பாலம் மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது
- 23 டிசம்பர் 2011: 2010 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, மெக்சிகோ அணிகள் இரண்டாம் சுற்றில் தோல்வி
செவ்வாய், பெப்ரவரி 21, 2012
இலத்தீன் அமெரிக்க நாடான மெக்சிக்கோவின், வடக்கு மாகாணமான மான்டெரரி பகுதியில், ஆப்போடாகா சிறையில் நேற்று முன்தினம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 44 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சிறைச்சாலையில் மொத்தம் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி உண்டு. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் 30 சதவீதம் அதிகமான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறைச்சாலையின் 'டி' கட்டடத்தில் அடைக்கப்பட்டிருந்த 2 தரப்பு கைதிகள் இடையே அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட மோதலின் போது, கையில் கிடைத்த பயங்கர ஆயுதங்களால் கைதிகள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சுட்டது சிறைச்சாலை அதிகாரிகளா அல்லது கைதிகளா என்பது தெரியவில்லை.
மெக்சிக்கோ சிறையில் கைதிகள் மோதிக்கொள்வது வழக்கமான ஒரு விடயமாகும். இதே போன்று கடந்த மாதமும் இச்சிறையில் கலவரம் நடந்ததுள்ளது. இந்த சிறையில் போதை மருந்து கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய் கைதிகள் உள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகின்றது.
கடந்த மாதம் மெக்சிகோவில் உள்ள மற்றொரு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 2010 ஆம் ஆண்டில் சிறைச்சாலை வன்முறைகளில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] மூலம்
- 44 killed in Mexican prison melee,cnn, பெப்ரவரி 20, 2012
- Gangs Blamed as Riot Kills Dozens at Prison in Mexico, nytimes , பெப்ரவரி 20, 2012
- 44 killed in Mexico prison riot; guards detained ,ibnlive, பெப்ரவரி 20, 2012
- At least 44 killed in Mexican prison riot, latimesblogs, பெப்ரவரி 20, 2012
- மெக்சிகோ சிறையில் கலவரம்:38 பேர் பலி, montrealgazette , பெப்ரவரி 20, 2012
- மெக்சிகோ சிறையில் கைதிகள் பயங்கர மோதல்-44 பேர் பலி,abcnews, பெப்ரவரி 20, 2012