ஜப்பானில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் யுகியோ அட்டொயாமா தலைமையிலான எதிர்க்கட்சி பெரும் வெற்றி பெற்றது. (நியூயோர்க் டைம்ஸ்)
தலாய் லாமா தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டார். (அல்ஜசீரா)
ஆகஸ்ட் 29, 2009: இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது. (இண்டியன் எக்ஸ்பிரஸ்)
ஆகஸ்ட் 28, 2009: நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் (STS-128) தனது 37வது பயணத்தை ஆரம்பித்தது. (ஏஎஃப்பி)
ஆகஸ்ட் 27, 2009:
கொழும்பில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டன். (வீரகேசரி)
வடகிழக்கு பர்மாவில் அரசப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (ஏஎஃப்பி)
ஆகஸ்ட் 26, 2009: இலங்கையில் 1989ம் ஆண்டு கடத்தல் தொடர்பான குற்றம் புரிந்த, முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி டக்ளஸ் பீரிஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. (டெய்லிமிரர்)]
ஆகஸ்ட் 25, 2009:
மைக்கல் ஜாக்சன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் மருத்துவ தடயவியல் நிபுணர் அறிவித்துள்ளார். (ராய்ட்டர்ஸ்)
தெற்கு ஆப்கானிஸ்தான், கண்டகார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
செச்சினியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 3 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர் கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
வன்னிப் படையெடுப்பை நடத்திய இலங்கை படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். சனல் 4
ஆகஸ்ட் 24, 2009: வியநாம் போரின் போது கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகளின் புதைகுழிகள் இரண்டு மத்திய வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டன. (சைனா டெய்லி)
ஆகஸ்ட் 21, 2009:
வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் பதுங்கு தலத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
செச்னியாவில் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
ஆகஸ்ட் 20, 2009: 1988 இல் இடம்பெற்ற லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி மானிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டார். (பிபிசி)
ஆகஸ்ட் 17, 2009:
ரஷ்யாவின் வடக்கு கவ்காசில் காவல்நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லாப்பட்டு 60 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ்)
ஜூலை மாதத்தில் காணாமல் போயிருந்த எம்வி ஆர்க்டிக் கடல் என்ற ரஷ்ய சரக்குக் கப்பலை சுவீடனின் கரைக்கப்பால் ரஷ்ய கடற்படை கண்டுபிடித்தது. (சீஎனென்)
இரண்டு ரஷ்ய போர்விமானங்கள் பயிற்சியின் போது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.(பிபிசி)
ஆகஸ்ட் 15, 2009: கொலம்பியா தனது ஏழு இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா பாவிப்பதற்கான உடன்படிக்கைக்கான பேச்சுக்களை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. (பிபிசி)
ஆகஸ்ட் 14, 2009:
பாகிஸ்தான் தனது முதலாவது பன்னாட்டு சரக்குத் தொடருந்து சேவையை இஸ்லாமாபாத்திற்கும் இஸ்தான்புல்லிற்கும் இடையே ஆரம்பித்தது. (பிபிசி)
இந்தியப் பெருங்கடலில் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே 77 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் வந்த படகை அவுஸ்திரேலியா வழிமறித்து தடுத்து நிறுத்தியது. தினகரன்)
பிலிப்பைன்சில் அரச படைகளுக்கும் முஸ்லிம் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் 53 போராளிகளும் 23 படையினரும் கொல்லப்பட்டனர். தினாகரன்)
துர்கஸ் கைகோசு தீவுகளில் அரச ஊழல் காரணமாக ஐக்கிய இராச்சியம் தனது நேரடி ஆட்சியை அடுத்த இரு ஆண்டுகளுக்கு அறிவித்தது. (பிபிசி)
ஆகஸ்ட் 13, 2009:
ரஷ்யாவின் தாகெஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்களில் 4 காவல்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
இட்லரால் கையெழுத்திடப்பட்ட மைன் கம்ப் நூலின் மூலப்பிரதி ஒன்று லண்டனில் £21,000 களுக்கு ஏலத்தில் விற்கப்படட்து. (பிபிசி)
ஆகஸ்ட் 12, 2009:
தனது விண்மீன்களின் சுற்றுத் திசைக்கு எதிராகச் சுற்றும் வாஸ்ப்-17பி (WASP-17B) என்ற முதலாவது கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)
ஆகஸ்ட் 11, 2009:
அந்தமான் தீவுகளில் 7.6 அளவு நிலநடுக்கமும் டோக்கியோவில் 6.5 அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டன. (பிபிசி)
சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்கத்தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். (ஐரிஷ் இண்டிபெண்டெண்ட்)
விண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் இரண்டு கோள்களிடையே கடும் மோதல் ஒன்று இடம்பெற்றதை நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது. (பிபிசி)
ஆகஸ்ட் 10, 2009:
கிழக்கு இமயமலையில் 244 தாவரங்கள், 16 நிலநீர் வாழிகள் உட்பட 350 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (சின்குவா)
ஈராக்கில் குண்டுத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)
ஆகஸ்ட் 8, 2009:
மவுரித்தேனியாவில் பிரெஞ்சு தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)
ஈழப்போர் முடிவின் பின்னர் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல்கள் இலங்கையில் இடம்பெற்றன. (ராய்ட்டர்ஸ்)
ஆகஸ்ட் 7, 2009: ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
ஆகஸ்ட் 6, 2009:
விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
மும்பையில் 2003 இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)
பாகிஸ்தானின் சிந்து நதியில் பேருந்து ஒன்று மூழ்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
ஆகஸ்ட் 5, 2009: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் வருகையை ஒட்டி தான் தடுத்து வைத்திருந்த இரண்டு அமெரிக்க செய்தியாளர்களை வட கொரியா விடுவித்தது. (சிஎனென்)
ஆகஸ்ட் 4, 2009: மெல்பேர்ணில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சோமாலிய தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். (தி ஏஜ்)
ஆகஸ்ட் 3, 2009:
மேற்கு மெக்சிக்கோவில் பல நிலநடுக்கங்கள் பதிவாயின. (பிபிசி)
தெற்கு சூடானில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 185 பேர் கொல்லப்பட்டனர்.(பிபிசி)
ஆகஸ்ட் 2, 2009:
கனடாவில் அல்பேர்ட்டாவில் இசைநிகழ்ச்சியொன்றில் மேடை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். (சிபிசி)
கிழக்கு ஜெருசலேம் நகரில் 1956 ஆம் ஆண்டில் இருந்து வசித்துவந்த 9 பாலஸ்தீனக் குடும்பங்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். (பிபிசி)
இந்தோனேசியாவின் பப்புவாவில் 16 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போனது. (ஏஎஃப்பி)
வடக்கு நைஜீரியாவில் இடம்பெற்றுவரும் மதக்கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்தது. (சிஎனென்)
ஆகஸ்ட் 1, 2009:
மலேசியா, கோலாலம்பூரில் விசாரணை இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவான சட்டமூலத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (அல்ஜசீரா)
பாகிஸ்தானின் பஞ்சாபில் இடம்பெற்ற மதக் கலவரங்களில் குறைந்தது அறு கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
மங்கோலியாவில் 1930களில் முன்னைய கம்யூனிச அரசால் புதைக்கப்பட்ட பழைமையான பல பௌத்தச் சின்னங்கள் கோபி பாலைவனத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. (பிபிசி)