வெள்ளை மாளிகையில் அழையா விருந்தினர்களாக கலந்துகொண்ட தம்பதியினர் குறித்து சர்ச்சை
வெள்ளி, நவம்பர் 27, 2009
- 20 மே 2012: சீனாவின் மனித உரிமை ஆர்வலர் சென் குவாங்சென் அமெரிக்கா வந்து சேர்ந்தார்
- 11 மே 2012: மிகப்பழமையான மாயன் ஓவியங்கள், நாட்காட்டிகள் கண்டுபிடிப்பு
- 3 மே 2012: எட்வர்ட் மண்ச்சின் 'அலறல்' ஓவியம் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை
- 24 ஏப்ரல் 2012: சிறுகோள்களைக் குடைந்து கனிப்பொருட்களைச் சேகரிக்க கோடீசுவரர்கள் திட்டம்
- 22 ஏப்ரல் 2012: அமெரிக்கா $60 விலையில் எல்.ஈ.டி விளக்குகளை அறிமுகப்படுத்தியது
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்கும் முகமாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரச விருந்துபசாரத்தில் பல பாதுகாப்புத் தடுப்புக்களையும் மீறி, அழையா விருந்தாளிகளாக கலந்துகொண்ட தம்பதியினர் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வடக்கு வேர்ஜீனியாவைச் சேர்ந்த தாரிக், மிசெல் சலாகி என்ற தம்பதியினர் செவ்வாயன்று இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இரவு 7:15 மணியளவில் உள் நுழைந்தனர். இவர்கள் தொலைக்காட்சி நடிகர்கள் போன்று தோற்றமளித்திருந்த நிலையிலேயே வெள்ளை மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். மற்றும் இவர்கள் எந்த இருக்கைகளிலும் எப்போதும் அமரவில்லை என அங்கு கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டுமென வெள்ளை மாளிகையால் அமெரிக்க இரகசியப்பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் துணை ஜனாதிபதி ஜோ பைடன், வாஷிங்டன் மேயர் பென்ரி, வெள்ளைமாளிகை சிரேஷ்ட அதிகாரி உள்ளிட்டவர்களுடன் விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இவர்களது ஃபேஸ்புக்கில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
[தொகு] மூலம்
- Uninvited guests crash White House dinner: report, ராய்ட்டர்ஸ், நவம்பர் 25, 2009
- Uninvited Guests Make It Into State Dinner, த நியூயோர்க் டைம்ஸ், நவம்பர் 25, 2009
- "அமெரிக்க அரச விருந்தில் அழையா விருந்தினர்களாக கலந்துகொண்ட தம்பதியினர்". தினக்குரல், நவம்பர் 26, 2009
