மிருதங்க வித்துவான் கே. சண்முகம்பிள்ளை கொழும்பில் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 16, 2010


இலங்கையின் பிரபல மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை கொழும்பில் தனது 92 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை காலமானார்.


மிருதங்கக் கலையை குருகுல வாசம் முறையில் இந்தியாவின் குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையிடம் கற்றுக்கொண்டவர். இலங்கை வானொலியின் ஆரம்பகால கலைஞர்களில் சண்முகம்பிள்ளையும் ஒருவர். மிருதங்க வித்துவானாக சிறப்புத் தரத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்துள்ளார். பல பிரபல இலங்கை, இந்திய கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்து சிறப்பித்தவர்.


இலங்கை கலாசார அமைச்சு கலாபூஷண விருதையும், டவர் ஹோல் நிதியம் கலா மாண்ய விருதையும் இவருக்கு வழங்கி கௌரவித்தன.


இவர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் தந்தையுமாவார்.

மூலம்[தொகு]