மிருதங்க வித்துவான் கே. சண்முகம்பிள்ளை கொழும்பில் காலமானார்
தோற்றம்
ஞாயிறு, மே 16, 2010
தொடர்புள்ள செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: மேற்குவங்கத்தில் சிபிஐ(எம்) தலைவர் திலிப் சர்க்கார் சுட்டுக்கொலை
- 17 பெப்ரவரி 2025: கவிஞர் வாலி காலமானார்
- 17 பெப்ரவரி 2025: இயற்கை உழவறிஞர் முனைவர் நம்மாழ்வார் இயற்கை எய்தினார்
- 17 பெப்ரவரி 2025: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
இலங்கையின் பிரபல மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை கொழும்பில் தனது 92 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை காலமானார்.
மிருதங்கக் கலையை குருகுல வாசம் முறையில் இந்தியாவின் குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையிடம் கற்றுக்கொண்டவர். இலங்கை வானொலியின் ஆரம்பகால கலைஞர்களில் சண்முகம்பிள்ளையும் ஒருவர். மிருதங்க வித்துவானாக சிறப்புத் தரத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்துள்ளார். பல பிரபல இலங்கை, இந்திய கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்து சிறப்பித்தவர்.
இலங்கை கலாசார அமைச்சு கலாபூஷண விருதையும், டவர் ஹோல் நிதியம் கலா மாண்ய விருதையும் இவருக்கு வழங்கி கௌரவித்தன.
இவர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் தந்தையுமாவார்.
மூலம்
[தொகு]- மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை கொழும்பில் நேற்று காலமானார், தினக்குரல், மே 16, 2010