2013 இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் 21 இல் நடைபெறும்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 2, 2013

இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மொத்தம் 3785 வேட்­பா­ளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். மூன்று மாகாண சபை­க­ளுக்கும் 142 உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்யப்படுவர். 4,358,261 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.


மத்­திய மாகாண சபைக்கு கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பில் 1517 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர். வடமேல் மாகா­ணத்தில் இரண்டு மாவட்­டங்­க­ளுக்கும் 1362 வேட்­பா­ளர்கள் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

வட மாகாணம்

வட மாகாணத்தில் 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டணி, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட முக்கிய அர­சியல் கட்­சி­கள், மற்றும் சுயேட்சைக் குழுக்­கள் சார்பாக 906 பேர் இங்குள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றனர். 714,488 பேர் இங்கு வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர்.


யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் 16 பேர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 426,703 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். கிளிநொச்சி மாவட்­டத்தில் 4 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 68,589 பேர் வாக்­க­ளிக்கத் தகு­தி­பெற்­றுள்­ளனர். மன்னார் மாவட்­டத்தில் 5 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 72,420 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். வவுனியா மாவட்­டத்தில் 6 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 94,367 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 5 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 52,409 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். வட மாகாணசபைக்கு முதற்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெறுகின்றன.


இலங்கைத் தொழி­லாளர் கட்சி, இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, ஜன­சத பெர­முன, சோச­லிச சமத்­துவக் கட்சி, ஐக்­கி­ய­ தே­சியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டணி, ஜன­நா­யக சுதந்­திரக் கட்சி, ஜன­நா­யக ஐக்­கிய முன்னணி, ஐக்­கிய சோசலிசக் கட்சி, ஸ்ரீலங்கா மகா­ஜன பட்­சய ஆகிய 11 அர­சியல் கட்­சிகள் யாழ். மாவட்­டத்தில் போட்டியிடுகின்றன. அத்துடன் அன்­ரனி ரங்­க­து­சாரா, இரா­ஜ­லிங்கம் விதுன்நாச், ரங்­க­நாதன் திரி­லோ­க­நாதன், பின் மதிமுகராசா விஜ­யகாந், ஜனுன் முகமட் விஜய், இரா­ச­ரத்­தினம் தாமோ­தரம் ராஜா, மாணிக்கசோதி அபி­மன்­ன­சிங்கம், செல்வி. தம்­பிப்­பிள்ளை இரு­த­ய­நாதர், கிருஷ்­ண­சாமி சுபாஸ்­கரன் ஆகியோர் தலை­மை­யி­லான 9 சுயேச்சை குழுக்­களும் யாழ். மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்­ளன.

மத்­திய மாகாணம்

மத்­திய மாகா­ணத்தில் 56 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்ய 1,889,557 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். கண்டி மாவட்டத்தில் 1,015,315 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 29 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாத்­தளை மாவட்­டத்தில் 366,549 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 11 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 507,693 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 16 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 2009 தேர்தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்டணி 36 உறுப்பினர்களையும், ஐக்­கிய தேசிய கட்சி 22 உறுப்பினர்களையும், பெற்றிருந்தது.

வடமேல் மாகாணம்

வட மேல் மாகா­ணத்தில் 50 பிர­தி­நி­தி­களை தெரிவு செய்ய 1,754,218 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். குரு­ணாகல் மாவட்­டத்தில் 1,227,810 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 34 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். புத்­தளம் மாவட்­டத்தில் 526,408 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 16 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 2009 தேர்தலில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணி 37 உறுப்பினர்களையும், ஐக்­கிய தேசிய கட்சி 14 உறுப்பினர்களையும், மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு உறுப்பினரையும் பெற்­றி­ருந்­தன.


மூலம்[தொகு]