இந்தியப் பொதுத் தேர்தல் 2014: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 11, 2014

இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.

இந்திய பாராளுமன்றத்திற்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 9 கட்டங்களாக நடக்கிறது.

இதில் மூன்றாவது கட்டமாக 11 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் என 91 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

  • கேரளா–20,
  • மராட்டியம்–10,
  • மத்தியபிரதேசம்–9,
  • உத்தரபிரதேசம்–10,
  • ஒடிசா–10,
  • பீகார்–6,
  • டெல்லி–7,
  • அரியானா–10,
  • காஷ்மீர்–1,
  • ஜார்கண்ட்–4,
  • சத்தீஷ்கார்–1
  • யூனியன் பிரதேசங்கள்:
  • சண்டிகார்–1,
  • அந்தமான் நிக்கோபார்–1,
  • லட்சத்தீவு–1.


மூலம்[தொகு]