இரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: இரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: திருத்தந்தை 16ம் பெனடிக்ட் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்
- 17 பெப்ரவரி 2025: அசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’
- 17 பெப்ரவரி 2025: வத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி
ஞாயிறு, ஏப்ரல் 27, 2014
முன்னாள் திருத்தந்தைகள் 23ம் யோவான், மற்றும் 2ம் அருள் சின்னப்பர் ஆகியோரைப் புனிதர்களாக அறிவிக்கும் நிகழ்வு இன்று வத்திக்கான் நகரில் பெருந்திரளானோர் முன்னிலையில் இடம்பெற்றது.

திருத்தந்தை பிரான்சிசு, மற்றும் இவருக்கு முன்னிருந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆகியோர் இவ்வைபவத்தை நடத்தி வைத்தனர். 2 மணி நேரம் இடம்பெற்ற இவ்வைபவத்தை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இதனை நேரில் கண்டு களித்தனர். அரசு, மற்றும் நாட்டுத்தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தலைவர்கள் இதில் பங்கு கொண்டனர்.
இரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.
திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 2005 ஆம் ஆண்டு இறக்கும் வரை பதவியில் இருந்தார். இவரது பதவிக்கால 26 ஆன்டுகளாகும். 9 ஆண்டுகளில் இவரை புனிதர் பட்டம் வந்தடைந்தது. ஆனால், இத்தாலியில் பிறந்த 23ம் யோவான் 1958 முதல் 1963 வரை பதவியில் இருந்தார். இவர் நல்ல திருத்தந்தை என அழைப்பட்டவர். இவரைப் புனிதராக்கும் திட்டத்தை அண்மையிலேயே திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார்.
மூலம்
[தொகு]- Vatican declares Popes John Paul II and John XXIII saints, பிபிசி, ஏப்ரல் 27, 2014
- Pope Francis makes saints of Popes John XXIII and John Paul II, டெலிகிராப், ஏப்ரல் 27, 2014
