இரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 27, 2014

முன்னாள் திருத்தந்தைகள் 23ம் யோவான், மற்றும் 2ம் அருள் சின்னப்பர் ஆகியோரைப் புனிதர்களாக அறிவிக்கும் நிகழ்வு இன்று வத்திக்கான் நகரில் பெருந்திரளானோர் முன்னிலையில் இடம்பெற்றது.


படிமம்:JohnXXIII.jpg
திருத்தந்தை 23ம் யோவான்
துருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர்

திருத்தந்தை பிரான்சிசு, மற்றும் இவருக்கு முன்னிருந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆகியோர் இவ்வைபவத்தை நடத்தி வைத்தனர். 2 மணி நேரம் இடம்பெற்ற இவ்வைபவத்தை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இதனை நேரில் கண்டு களித்தனர். அரசு, மற்றும் நாட்டுத்தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தலைவர்கள் இதில் பங்கு கொண்டனர்.


இரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.


திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 2005 ஆம் ஆண்டு இறக்கும் வரை பதவியில் இருந்தார். இவரது பதவிக்கால 26 ஆன்டுகளாகும். 9 ஆண்டுகளில் இவரை புனிதர் பட்டம் வந்தடைந்தது. ஆனால், இத்தாலியில் பிறந்த 23ம் யோவான் 1958 முதல் 1963 வரை பதவியில் இருந்தார். இவர் நல்ல திருத்தந்தை என அழைப்பட்டவர். இவரைப் புனிதராக்கும் திட்டத்தை அண்மையிலேயே திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார்.


மூலம்[தொகு]