கடாபியின் இளைய மகன் நேட்டோ வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்
- 14 பெப்பிரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 14 பெப்பிரவரி 2025: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்
- 14 பெப்பிரவரி 2025: லிபியாவில் டிரக் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் பலி
- 14 பெப்பிரவரி 2025: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
- 14 பெப்பிரவரி 2025: நோயாளிகளை ஏற்றிச் சென்ற லிபிய விமானம் துனீசியாவில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழப்பு
ஞாயிறு, மே 1, 2011
லிபியத் தலைநகர் திரிப்பொலி மீது நேட்டோ வான் தாக்குதல் நடத்தியதில் லிபியத் தலைவர் முஆம்மர் கடாபியின் இணைய மகன் சயீப் அல்-அராப் கொல்லப்பட்டதாக அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வான் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்தில் கேர்ணல் கடாபியும் தங்கியிருந்தார் என்றும் ஆனால் அவருக்கு எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கடாபியின் இளைய மகன் சயீப் உடன் கடாபியின் மூன்று பேரப் பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலை உறுதிப் படுத்தியுள்ள நேட்டோ பேச்சாளர், தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடவில்லை. "நேட்டோவின் தாக்குதல்கள அனைத்தும் இராணுவ நிலைகள் மீதே நடத்தப்படுகின்றன... தனிப்பட்ட எவரையும் நாம் குறி வைக்கவில்லை," என நேட்டோ பேச்சாளர் லெப்-ஜெனரல் சார்ல்ஸ் பூச்சார்ட் தெரிவித்தார். "உயிரிழப்புகள் குறித்து நாம் கவலை அடைகிறோம், குறிப்பாக தற்போதைய பிரச்சனையில் பொதுமக்கள் பலர் உயிரிழக்கிறார்கள்," என அவர் தெரிவித்தார்.
கடாபியின் ஆறாவது மகனான 29 வயது சயீப் அல்-அராப் கடாபி செருமனியில் கல்வி பயின்று சில நாட்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார். லிபியாவின் கிழக்கில் எதிராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெங்காசி நகரில் சயீப் கொல்லப்பட்டதைக் கொண்டாட அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன.
கடாபியின் வளர்ப்பு மகள் ஒருவர் 1986 ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார்.
மூலம்
[தொகு]- Nato strike 'kills Saif al-Arab Gaddafi', Libya says, பிபிசி, மே 1, 2011
- Nato strike 'kills Gaddafi's youngest son', அல் ஜசீரா, மே 1, 2011