கடாபியை உயிருடன் கைப்பற்றியவர் கடுமையான சித்திரவதைக்குப் பின் உயிரிழந்தார்
- 17 பெப்ரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்
- 17 பெப்ரவரி 2025: லிபியாவில் டிரக் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: நோயாளிகளை ஏற்றிச் சென்ற லிபிய விமானம் துனீசியாவில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழப்பு
புதன், செப்டெம்பர் 26, 2012
லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியை உயிருடன் பிடித்தவரான ஒம்ரான் பென் சாபான் என்பவர் நேற்று பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார். இவர் கடாபியின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.
22 வயதான சாபானின் உடல் அவரது பிறந்த ஊரான மிஸ்ரட்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது இறுதிக்கிரியைகளில் இன்று பத்தாயியத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
சாபான் கடந்த சூலை மாதத்தில் கடத்தப்பட்டு 50 நாட்களாக பானி வாலிது என்ற நகரில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அரசுத்தரப்பின் சமரசப் பேச்சுக்களை அடுத்து கடந்த வாரம் இவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் கடுமையான சித்திரவதைக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் இலக்கான நிலையின் விடுவிக்கப்பட்ட சாபான் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நேற்று உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 20 இல் கடாபியை அவர் மறைந்திருந்த வடிகால் குழாயில் இருந்து வெளியே இழுத்தெடுத்து வீதியெங்கும் இழுத்துச் சென்றதை அடுத்து சாபான் பிரபலமானார்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார், அக்டோபர் 20, 2011
மூலம்
[தொகு]- Libya: Thousands mourn Gaddafi 'captor' Omran Shaaban, பிபிசி, செப்டம்பர் 26, 2012
- Libyan behind Gaddafi capture dies in France, அல்ஜசீரா, செப்டம்பர் 26, 2012