கொசோவோ அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி
புதன், நவம்பர் 3, 2010
- 17 பெப்ரவரி 2025: கொசோவோவில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன
- 17 பெப்ரவரி 2025: கொசோவோ அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி
- 17 பெப்ரவரி 2025: 1999 கொசோவோ படுகொலைகளுக்காக ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு
- 17 பெப்ரவரி 2025: கொசோவோ விடுதலை சட்டபூர்வமானது என பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு
- 17 பெப்ரவரி 2025: கொசோவோ-அல்பேனியர்களின் புதிய புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது
கொசோவோவின் சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கவிழ்க்கப்பட்டுள்ளது.
கொசோவோ சேர்பியாவில் இருந்து விடுதலையை அறிவித்து மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இவ்வாட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.
டிசம்பர் மாதத்தில் புதிய தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணியில் இருந்து சிறிய கட்சி ஒன்று வெளியேறியதை அடுத்து எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. 120 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 66 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிரதமர் ஹசீம் தாச்சியின் பிகேகே கட்சி மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
71 நாடுகள் மட்டுமே கொசோவோவைத் தனிநாடாக அங்கிகரித்துள்ளன. இதனால் ஐக்கிய நாடுகளில் இதற்கு இன்னும் உறுப்புரிமை வழங்கப்படவில்லை.
மூலம்
- Kosovo's government brought down by no-confidence vote, பிபிசி, நவம்பர் 2, 2010
- Kosovo minority government falls, அல்ஜசீரா, நவம்பர் 2, 2010
