சிரியா தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்
- 17 பெப்ரவரி 2025: அலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது
- 17 பெப்ரவரி 2025: சிரியாவிலிருந்து உருசிய படைகளில் பெரும் பகுதி விலகல் என உருசிய அதிபர் புதின் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: உருசியப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது
சனி, மே 26, 2012
சிரியாவில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற அரசுப் படைகளின் தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 90 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் கண்காணிப்பாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
ஹூலா நகரத்தில் இடம்பெற்ற இத்தாக்குதல்கள் பன்னாட்டுச் சட்டங்களைப் புறக்கணிப்பதாக உள்ளது என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். ஆயுதபாணிகளான தீவிரவாதிகளே இத்தாக்குதல்களை நடத்தியதாக சிரிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2011 மார்ச் மாதத்தில் சிரிய அரசுத்தலைவர் பசார் அல்-அசாதின் ஆட்சிக்கு எதிரான எழுச்சி ஆரம்பித்ததற்குப் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் இதுவாகும் எனக் கூறப்படுகிறது.
இறந்தவர்களில் பலர் எறிகணைத் தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளதாகவும், ஏனையோர் சஹீபா என்றழைக்கப்படும் சிரியத் துணை இராணுவக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் கோஃபி அன்னான் தலைமையில் ஐநாவின் 250 கண்காணிப்பாளர்கள் நிலை கொண்டுள்ள நிலையில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சிகள் ஆரம்பித்து இதுவரை 10,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மூலம்
[தொகு]- Syria crisis: Houla child massacre confirmed by UN, பிபிசி, மே 26, 2012
- UN confirms 'massacre' of children in Houla, அல்ஜசீரா, மே 26, 2012