சீரொன்றாப் படிகத்தைக் கண்டுபிடித்த இசுரேலியருக்கு 2011 வேதியியல் நோபல் பரிசு
- 17 பெப்ரவரி 2025: 2012 நோபல் வேதியியல் பரிசு கணினி வேதியியலாளர் மூவருக்குக் கிடைத்தது
- 17 பெப்ரவரி 2025: சிரியாவில் வேதி ஆயுதங்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு 2013 நோபல் அமைதிப் பரிசு
- 17 பெப்ரவரி 2025: லைபீரிய அதிபர் உட்பட மூன்று பெண்களுக்கு 2011 நோபல் அமைதிப் பரிசு
- 17 பெப்ரவரி 2025: அமெரிக்கப் பேராசிரியர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு
- 17 பெப்ரவரி 2025: நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்
புதன், அக்டோபர் 5, 2011
குவாசிகிறிஸ்டல் எனப்படும் சீரொன்றாப் படிகத்தைக் கண்டுபிடித்த இசுரேலியரான டேனியல் செட்சுமன் என்பவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இசுரேலிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த டேனியல் செட்சுமன் 10 மில்லியன் சுவீடியக் குரோனர்களை (£940,000) பரிசாகப் பெறுவார்.
அலுமீனியம், மங்கனீசு போன்ற உருக்கிய உலோகங்களை வெகு விரைவாகக் குளிரவைப்பதன் மூலம் பகுதிப்படிகங்களை செட்சுமன் உருவாக்கினார். நுண்ணோக்கியூடாக இவற்றை அவதானித்த போது வழமையான படிகம் போலல்லாமல், புதிய படிகங்கள் முழுமையாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் உருவவடிவம் சீராக அடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனைப் பார்க்க சீராக இருப்பது போல் தோற்றம் அளிக்கும் ஆனால் சீரொன்றாத படிகம். இதனாலேயே அவை quasicrystal என அழைக்கப்படுகின்றன. இவ்வகையான படிகங்கள் மிகவும் அழகானவை என வேதியியல் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டேவிட் பிலிப்ஸ் தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- Nobel win for crystal discovery, பிபிசி, அக்டோபர் 5, 2011
- Israeli Wins Chemistry Nobel For Quasicrystals, என்பிஆர், அக்டோபர் 5, 2011
