செக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

முன்னாள் சோவியத் குடியரசான செக் குடியரசில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.


அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், சமூக சனநாயகக் கட்சி 20% இற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளனர். தனியே ஆட்சியமைக்க இது போதுமானதாக இல்லை. இதனால் இங்கு மீண்டும் ஒரு சிறுபான்மை அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக 19% வாக்குகளைப் பெற்று ஏஎன்ஓ கட்சி வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் 15% வாக்குகளைப் பெற்றனர்.


பீட்டர் நேக்கசின் கட்சி ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டதை அடுத்து கடந்த சூன் மாதத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் ஓர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.


மூலம்[தொகு]