டாக்காவில் நடைபெற்ற கிரிக்கட் முக்கோணத் தொடரில் இலங்கை வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 13, 2010

வங்காள தேசத் தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்ற துடுப்பாட்ட முக்கோணத் தொடரில் இலங்கை வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஐம்பது ஓவர்களில் 245 ஓட்டங்களை எடுத்தது. ஆரம்பத்தில் விக்கட்டுகள் மளமளவெனச் சரிந்தாலும் றைனாவின் திறமையான நூறு ஓட்டங்களால் இந்திய அணி ஸ்திரமான நிலையை அடைந்தது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இலக்கை 48.3 ஓவர்களில் ஆறு விக்கட் இழப்பிற்குப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.


71 ஓட்டங்களை இலங்கை அணிக்காகப் பெற்றுக்கொடுத்த மகேல ஜயவர்த்தன ஆட்ட வீரனாகத் தெரிவு செய்யப்படார்.

மூலம்[தொகு]