தென்னாப்பிரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்று தீப்பற்றியதில் 18 பேர் இறப்பு
Appearance
திங்கள், ஆகத்து 2, 2010
தென்னாப்பிரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: தென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: தென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தரப்படும்
- 17 பெப்ரவரி 2025: நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி
- 17 பெப்ரவரி 2025: தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்
- 17 பெப்ரவரி 2025: தென்னாப்பிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை
தென்னாப்பிரிக்காவின் அமைவிடம்
தென்னாப்பிரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்றில் தீப்பற்றியதில் 18 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
தலைநகர் ஜொகான்னசுபேர்கில் இருந்து 50 கிமீ தென்கிழக்கே நைஜல் என்ற இடத்தில் பீட்டர் வெசெல்ஸ் முதியோர் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 0900 மணியளவில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
இல்லத்தில் இருந்த மேலும் 84 பேர் அருகில் இருந்த தேவாலயம் ஒன்றிற்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
17 பேர் தீயில் கருகி மாண்டனர் என்றும் ஒருவர் மாரடைப்பால் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ”எட்டு அல்லது ஒன்பது பேரை நான் காப்பாற்றினேன் என நினைக்கிறேன். பலரை என்னால் பாரத்தினால் தூக்க முடியாமல் போய் விட்டது,” என ஒரு மீட்புப் பணியாளர் தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- Fire at South Africa retirement home fire 'kills 18', பிபிசி, ஆகத்து 2, 2010
- South Africa retirement home fire kills 18, கார்டியன், ஆகத்து 2, 2010