நியூசிலாந்தில் சுரங்க வெடிப்பை அடுத்து பல தொழிலாளர்களைக் காணவில்லை
வெள்ளி, நவம்பர் 19, 2010
- 17 பெப்ரவரி 2025: நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது
- 17 பெப்ரவரி 2025: இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்
- 17 பெப்ரவரி 2025: நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனை இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கின
- 17 பெப்ரவரி 2025: நியூசிலாந்தில் 6.5 அளவு நிலநடுக்கம், நாடாளுமன்றம் சேதம்
- 17 பெப்ரவரி 2025: ஆப்கானித்தானில் இருந்து 2013 இற்குள் தமது படையினரை மீள அழைக்க நியூசிலாந்து முடிவு
நியூசிலாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து ஒன்றை அடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்க 27 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் பைக் ஆற்றுப் படுகையில் 58 கிமீ தூரத்தே உள்ள கிரேமவுத் என்ற இடத்திலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்ததாக அந்நகரத்தின் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது மிகவும் பாரதூரமான நிகழ்வு என்றும், ஆனாலும் நிவாரணப் பணியாளர்கள் அவ்விடத்துக்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுரங்கத்தினுள் அகப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் அறியப்படவில்லை என்றும் வெடி விபத்துக்கான காரணம் தெரிவ்யவில்லை எனவும் அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இவ்விபத்து உள்ளூர் நேரப்படி இன்று மாலை 1630 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு சுரங்க விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
மூலம்
[தொகு]- New Zealand miners missing after explosion, பிபிசி, நவம்பர் 19, 2010
- Dozens missing after NZ mine blast, ஏபிசி, நவம்பர் 19, 2010