மலேசியாவில் எதிர்க்கட்சி ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்
ஞாயிறு, நவம்பர் 22, 2009
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது
- 17 பெப்ரவரி 2025: காணாமல் போன விமானத்தைத் தேடும் முயற்சிகளை கைவிடமாட்டோம்: மலேசியா அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து விட்டதாக மலேசியா அறிவிப்பு
மலேசியாவில் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்திருந்த எதிர்க்கட்சி ஆர்வலர், கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர் ஒருவர் கூறியதை அடுத்து, அந்த எதிர்க்கட்சி ஆர்வலரின் உடல் இரண்டாவது தடவையாக பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதற்காக கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
டியோ பெங்ஹொக் என்ற அந்த ஆர்வலர், மலேசிய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலக சாளரங்களின் கீழே மேற்கூரை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
எதிர்க்கட்சி கட்சித் தலைவர் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்தக் கட்டிடத்தில் வைத்து டியோ விசாரிக்கப்பட்டிருந்தார்.
டியோ கடந்த ஜூலையில் ஒன்பது மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் தாக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், குரல்வளை நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டிருக்கலாமென்று அவரது உடலில் காணப்படும் தழும்புகள் காட்டுவதாக பிரபலமான தாய்லாந்து நோய்க்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ராஜானாசுனாந்து கூறியுள்ளார்.
சிலாங்கூர் செமினியில் உள்ள நிர்வாணா நினைவுப் பூங்காவில் சோகமான சடங்குகளுடன் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக்கின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
மூலம்
[தொகு]- "Malaysia opposition aide Teoh Beng Hock's body exhumed". பிபிசி, நவம்பர் 21, 2009