மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: பாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு
திங்கள், சனவரி 7, 2013
அதிகாரபூர்வ பொது ஆவணங்களில் "பாலத்தீன நாடு" என்பதைப் பயன்படுத்தத் தயாராகுமாறு மேற்குக் கரை அரசு அலுவலர்களுக்கு பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் நேற்று உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் "பாலத்தீன அதிகாரசபை" என்றே பொறிக்கப்பட்டு வருகிறது.
பொது ஆவாணங்களில் இவ்வாறான மாற்றம் பாலத்தீன நாடு "தனது சொந்த அமைப்புகளை அமைக்கவும், தமது நாட்டுக்கான அரசுரிமையை அங்கீகரிக்கவும்" உதவும் என அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சு, மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாலத்தீனத் தூதரகங்கள் இனிமேல் பாலத்தீன நாடு என்பதைப் பயன்படுத்த வேண்டுமென சென்ற வாரம் அப்பாஸ் உத்தரவிட்டிருந்தார்.
இந்தத் திடீர் அறிவிப்புக் குறித்து இசுரேல் இதுவரை கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.
கடந்த நவம்பர் மாதத்தில் பாலத்தீனம் ஐக்கிய நாடுகளில் உறுப்பினரற்ற பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. இந்த மாற்றத்தை இசுரேலும், அமெரிக்காவும் எதிர்ப்பதாக அறிவித்திருந்தன.
மூலம்
[தொகு]- 'Palestine' to be used in West Bank public documents, பிபிசி, சனவரி 6, 2013
- Palestine to issue 'State of Palestine' documents, வொய்ஸ் ஒஃப் இரசியா, சனவரி 7, 2013
