ரன்வீர்சேனா அமைப்பின் 16 பேருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு
வியாழன், ஏப்ரல் 8, 2010
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
- 16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
இந்தியாவின் அமைவிடம்
பீகார் மாநிலம் சகன்னாபாத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த படுகொலைகளுக்கு பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரன்வீர்சேனா அமைப்பைச் சேர்ந்த 16 பேருக்கு பட்னா நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக, நிலச்சுவான்களின் பாதுகாப்புப்படையாக செயல்பட்டுவரும் ரன்வீர்சேனா எனற அமைப்பினர் தலித் பொதுமக்கள் 58 பேரை 1997 டிசம்பர் 1 ஆம் நாள் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் 27 பெண்களும் 10 சிறுவர்களும் அடங்குவர்.
இந்த வழக்கில், 10 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்றவர்கள் சிலரின் பிணையையும் உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மூலம்[தொகு]
- "16 Ranvir Sena men sentenced to death". இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 7, 2010
- "16 sentenced to death for 1997 Jehanabad carnage". என்டிரிவி, ஏப்ரல் 7, 2010