வங்காளதேசம்: விபத்தில் சிக்கி 26 பள்ளிச் சிறுவர்கள் உயிரிழப்பு
தோற்றம்
வங்காளதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: 2024 வங்காளதேசத் தேர்தல் முடிவுகள்
- 17 பெப்ரவரி 2025: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: துடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது
- 17 பெப்ரவரி 2025: ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு
- 17 பெப்ரவரி 2025: வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி
வங்காளதேசத்தின் அமைவிடம்
திங்கள், சூலை 11, 2011
வங்காளதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் பள்ளிச் சிறுவர்கள் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
காற்பந்துச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பும் வழியில் அவர்கள் பயணம் செய்த பாரவுந்து கால்வாய் ஒன்றில் சறுக்கி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. சிட்டகொங் மாவட்டத்தில், டாக்காவில் இருந்து 216 கிமீ தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றது.
மேலும் பலர் வாகனத்தினுள் சிக்கியுள்ளனர் என்றும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. முன்னதாக 40 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார். இறந்தவர்கள் அனைவரும் 8 முதல் 12 வயதானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- Bangladesh: at least 26 school children die in crash, பிபிசி, சூலை 11, 2011
- 40 children killed in Bangladesh bus crash, இன்டிபென்டென்ட், சூலை 11, 2011
